Sunday 31 May 2020

மெட்டும் பாட்டும் 2

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்
செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

ம்ம்ம்....ஒ.....ஓ.....ஓ
லளலளலளா......லளலளலளா.....லளலளலளலலலலலளா.......
ம்ம்ம்....
கங்கை நதி புனிதத்தில் நீராட வரூவாயா
மங்கை என் மனத்தினை போராட விடுவாயா

நீர் நனைத்த பொன்னுடம்பை நான் அணைத்து துடைக்கட்டுமா
அங்கங்கள் அழகை சொல்ல சிற்பம் செதுக்கட்டும்மா

ஒ....மன்னா உந்தன் மார்பில் மயங்கி போகின்றேன்
தெளிந்த பின்னும் தயங்கி மீண்டும் மயங்க பார்க்கின்றேன்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்
செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
ஒ...செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

ம்ம்ம்....புண்சிரிப்பும் கண் பறிக்கும் பூவிதழ்கள் கவர்ந்திழுக்கும்
கண்மணி உன் கார்குழலில் ஒளிந்து கொள்ளட்டுமா....ஆ

ஆ....ஆசைக்கு அறிவில்லை அதற்கும் ஓர் அளவில்லை
அளவில்லா ஆசை வைத்தேன் அதை நீ அறிவாயா

அக்கம் பக்கம் பார்த்து இடையே கிள்ளட்டும்மா
யாரோ என எண்ணி நீ என்னை கொஞ்சம் அடித்தால்லென்ன

ல ல லல… ல ல ல ல ல

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்

லல… ல ல ல லல… ல

ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

Thursday 28 May 2020

சிவ சிந்தனை 3

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
வரம் தரும் சிவனருட்பா
வரம் தரும் சிவனருட்பா
வளமோடு கலைகளை தா
வளமோடு கலைகளை தா
சிவனை நாளும் நீ நாடு
சிவனை நாளும் நீ நாடு

சிவனை நாளும் நீ நாடு
சிவனை நாளும் நீ நாடு
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

நாட்டியத்தின் நாயகனே நாடறியும் உன் நடனம்
நாட்டியத்தின் நாயகனே நாடறியும் உன் நடனம்
திருச்சபைகள் கலை பயிலும்
உன்திருவடிகள் தினம் பணியும்
வான் மழையாய் பொழியும் இசையும் அதில்
உள்ளம் மகிழ்ந்து துள்ளும்
வான் மழையாய் பொழியும் இசையும் அதில்
உள்ளம் மகிழ்ந்து துள்ளும்
அன்பையெங்கும் அள்ளிக்கொடு
சிவனை நாளும் நீ நாடு

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

முத்தமிழும் முப்பொருளும் முக்கனியும் முத்தணியும்
முத்தமிழும் முப்பொருளும் முக்கனியும் முத்தணியும்
திருவருளும் தினமருளும்
காரிருளும் கலைந்தொளிரும்
என் தவமும் மனமும் சிவமுகமே
சிவனிருந்தால் துன்பமேது
என் தவமும் மனமும் சிவமுகமே
சிவனிருந்தால் துன்பமேது
எமன்வந்தும் பயந்தோட 
சிவனை நாளும் நீ நாடு....

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
வரம் தரும் சிவனருட்பா.....அருட்பா.
வளமோடு கலைகளை தா.....கலைகளை தா...
சிவனை நாளும் நீ நாடு
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே