Friday 25 October 2019

My Ooty Trip 2017 ஊட்டி ஒரு ஒளியோவியம்


Ooty - Ootacamund in Tamilnadu is India's best Hill Station Tourist Spot. Cool weather,Immense Scenaries with Lakes,Waterfalls, Large Variety of Flowers and Special Botanical Rose Garden.

மலைகளின் ராணி ஊட்டி தமிழ்நாட்டின்/இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலா தளம்.


Friday 18 October 2019

அன்பு அம்மா


அன்பு அம்மா

அன்பு தோழனே
அப்பாவாகிவிடு....

தாத்தா பாட்டியாக
பெற்றோர் மாறவா....
வம்சம் அழியாமல் தலைக்கவா....
ஆண்மையின் நிருபணமா....
மலடல்ல மனைவி எனக்காட்டவா....
இல்லவே இல்லை!!!!


உன்னால்
ஒரு அன்பு மிக்க அம்மா
உருவாக மட்டுமே....

அன்பு தோழனே
அப்பாவாகிவிடு....

சக்திவேல்


கல்யாண மாலை வாழ்த்து


🌺கல்யாண மாலை🌺 வாழ்த்து🌺

மலர்கள் மட்டுமே சேர்வது பூமாலை
மனங்களும் கூடச் சேர்வது கல்யாண மாலை
மணமக்களே நீங்கள் மாற்றினது மாலைகளை மட்டுமல்ல
உங்கள் மனங்களையும் சேர்த்து தான்....

கல்யாண பட்டம் தந்து விட்டார்கள்
இனி காதல் பாடம் நீங்கள் படிக்கலாம்
பட்டம் தந்து படிக்க சொல்லும்
நம் பண்பாடு பெருமைக்குரியது போற்றுதற்குரியது....

தோழனே!
அருவிகள் தேடாத மலைத்தொடர் நீ....
இயற்கை இணைக்கிறது
உன்னுடன் ஒரு நயாகராவை....
நனைந்துகொள்....

உன்னில் ஒரு புதுவசந்தம் ஆரம்பம்
வெட்கப்படும் வெண்புறாவோடு
புது வானில் சிறகுகள் பறக்கட்டும்

ஏற்கனவே உங்கள் நட்பு பக்கங்கள்
நிறைந்து வழிகின்றன....
அது போல இனி குடும்ப பக்கங்களும்
நிரம்பி வழியட்டும்....

தோழனே! தோழியே! இனி நீங்கள்
பூக்களும் வாசனையும் போல...
புல்வெளியும் பச்சையும் போல...
உள்ளங்களையும் ரேகையும் போல...
மோனலிசாவும் புன்னகையும் போல...
இணைந்து,

நாளும் நலமுடன், மனம் மகிழ்வுடன்,
பொங்கும் புகழுடன், புன்னகை முகமுடன்,
இறைவன் அருளுடன், இனியாவும் இனிதுடன்,

நீங்கள் வாழ்க வளமுடன்.....

சக்திவேல்

ஆசை பைத்தியங்கள் கவிதைகள் குறும்படம்


Friday 11 October 2019

English Poems & Lyrics

I Challenged myself to write in English. The result, Glad to share my English Poems / Lyrics...





Thursday 10 October 2019

காட்டு பூக்கள்

காட்டு பூக்கள் தலைப்பில் எழுதிய கவிதைகள் மிகவும் குறைவு.... ஆனால் ஒவ்வொன்றும் ஆழமான அழுத்தமான கற்பனைகள் கவிதைகள்...










ஆசை பைத்தியங்கள்

என்னில்
தோன்றி மறைந்த
எண்ணங்களும்
கற்பனைகளும் பல பல
இங்கே மின்னுவது ஒரு சில.....

ஆசை பைத்தியங்கள் 
என்ற தலைப்பில்
எழுதிய கவிதைகள்...


















தேவி சரஸ்வதி துதிகள்