Saturday 27 June 2020

மெட்டும் பாட்டும் 4


நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

மூங்கில் பாடும் ஓசைகள் தென்றலில் மிதக்க
கண்கள் தேடும் ஆசைகள் காட்சியில் கரைய
காரிகை வண்ணம் கலைஎண்ணம்  எழில் அன்னம்
பூவிழி மயக்க இதழ் பதிக்க இடை இழுக்க...
இரவெல்லாம்.... இரவெல்லாம்....
உன்மடியிலே.... இனிவிடியவே....

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே

தந்தனே தானே ஹோய் ஹோய் ஹோய் தந்தானே தானே
தந்தனே தானே ஹோய் ஹோய் ஹோய் தந்தானே தானே
தந்தனே தானே நா தாந்தானே தானா
தந்தனே தானே நா தாந்தானே தானா

இளமை நாடும் இன்பங்கள் உறவிலே இனிக்க
பதுமை சூடும் மாலைகள் மஞ்சத்தில் மணக்க
தாரகை மின்னும் தேன்கிண்ணம் இவள் கன்னம்
பூமுகம் சிவக்க மலர் பறிக்க மனம் மயங்க
இமயம் தான்.....இமயம் தான்.....
கரைந்ததே..... கனிந்ததே.....

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே

Friday 19 June 2020

மெட்டும் பாட்டும் 3

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

ஒரு மின்னல் கீற்று ஒளி வீசும்
அதன் பின்னால் கத்தும் இடி பேசும்
நீர் போகும் இடமெல்லாம் புல் முளைக்கும்
கல்லுக்குள் விழுந்தாலும் உயிர் செழிக்கும்...

மழையே நீ எட்டி பார்க்கும் பாலை
மாறாதோ மலர் பறிக்கும் சோலை...

மண்வாசம் பூவாசம் மணம்வீசும்
நன் நாளே நீ வந்தாலே
இனி வாழ்வில் அந்நாள் திருநாள்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

நதி ஓடும் அழகில் மதி மயங்கும்
மாலை கதிரும் நிலவும் முகம் பார்க்கும்
நீர்க்கொட்டும் ஓசைகள் இசையாகும்
ஏர்ப்பிடிக்கும் உழவர்கள் மனம்மகிழும்...

ஆறேநீ காட்டில் மேட்டில் பிறந்து
அணையே உன் தொட்டில் விழுந்து தவழ்ந்து...

வான்ரசிக்கும கார்மேகம் உன்தேகம்
பூ மழையும் புயல் மழையும்
கடல் சேரும் உறவே இனிதே...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...