மாதேவியின் கண்களுக்கு காதுகளுக்கு குளிர்ச்சி
மகளிர் சேர்ந்து செய்யும் திருவிளக்கு பூசை நிகழ்ச்சி...
அகிலாண்டேஸ்வரியை போற்றி போற்றி விளக்கு ஒளியில் புகழ்ச்சி
அக்கம் பக்கமெல்லாம் கேட்க கேட்க பக்தி ஒலியில் புரட்சி....
நண்பர்கள் குழு முழங்குவது திடுமம் இசை போட்டு...
அன்பர்கள் மட்டுமல்ல
ஆகாயமே அதிரந்தது தினமும் ஓசை கேட்டு....
ஆண்டவனும் ஆனந்தமாய் ஆடினான்
மேலோகத்தில் காலில் சலங்கை இட்டு....
அம்பிகையும் அகமகிழ்ந்து ஊஞ்சலாடினாள்
பூலோகத்தில் காதல் வயப்பட்டு....
ரசித்து பார்க்க பாரம்பரிய ஒயிலாட்டம்
ரசிகன் சொன்னான் இதை விட என்ன பெரிய மயிலாட்டம்....
தெருவேங்கும் தொங்கும் பொம்மை கடைகள்
ஊரேங்கும் வாங்கி சுற்றும் சிறுவர் படைகள்....
விழாக்குழு நடத்தும் நாளும் கலை நிகழ்ச்சி
விருந்தினரும் பெறனும் மன மகிழ்ச்சி....
அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....