புதன், 25 டிசம்பர், 2019

பக்தி விளையாட்டு 5

தேவி மனம் மகிழணும் எக்காலமும்
தினசரி பூசைகள் நடக்கும் முக்காலமும்....
அம்பிகை திருமேனி நாளும் குளிரணும்
பன்னீரில், இளநீரில், நன்னீரில் நனையனும்....
அலங்காரி அங்கமெல்லாம் ஜொலிக்கும் தங்கமாக
அன்றாடம் சாத்து சந்தணம்,மஞ்சள்,குங்கும காப்பாக....
அம்மனுக்கு பூ வைத்து, பொட்டு வைத்து
மையிட்டு, மாலையிட்டு
வண்ண வண்ண பட்டு உடுத்தி
நாளும் பொழுதும் திருமேனியை அழகு படுத்தி....
தலை அணிகள், முகத்தணிகள்
காதணிகள், கழுத்தணிகள்
கையணிகள், இடையணிகள்
காலணிகள், விரலணிகள்
அம்மிணியின் உச்சி முதல் பாதம் வரை
உடம்பெல்லாம் மின்னுது பொன்நகையில்.....
என்றாலும் மனது மயங்குவதோ
சுந்தரி உனது புன்னகையில்.....
அன்னைக்கு அமுது படைத்து, தேங்காய் உடைத்து, 
கற்பூர, தீப, தூப ஆராதனைகள்
சுற்றும் மணியோசை கேட்க சிறப்பு பூசைகள்
சுற்றமும் கண்டு களிக்கவே மனதில் ஆசைகள்.....

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு.....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு.....
......சக்திவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக