கோயிலுக்கே குடிபெயர்ந்த பூசாரிகள் கட்ட கங்கணம்....
பால், பழம் தவிற உணவின்றி விரதம் இனி எட்டு நாள் எங்கணம்....
தாயே உனக்கு பூசைகள், சேவைகள் செய வருமே சக்தி அங்கணம்....
அக்கம் பக்கம் நாடி
காட்டிலும் மேட்டிலும் ஓடி
அரசமரம் ஆலமரம் தேடி
கொம்போடு கிளை கண்டு வெட்டு....
ஆளுயுர நிறுத்த அழகுற செதுக்க
மஞ்சள் பூசி வைப்போம் குங்கும பொட்டு....
பூமாலை சூடி, வேப்பிலை கட்ட
அம்மன் முன் பூசித்து கொண்டாடி கம்பம் போட்டு....
அதில் அக்னி வளர்த்த பூச்சட்டி வைக்க
பெண்கள் கூட்டம்கூடி குலவையிலே உனக்கு பாட்டு.....
அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக