பழநி பாலனே பழமுதிர் வேலனே
தணிகை குமரனே செந்தூர் வீரனே....
குன்றின் தலைவனே சுவாமி நாதனே
அழகனே அமுதனே பஞ்சா அமிர்தனே....
வா வா முருகா வெற்றிவேல் முருகா
வா வா முருகா வண்ணமயில் வாகனா....
வா வா முருகா திருமால் மருகா
வா வா முருகா சேவற்கொடி இறைவா....
அரோகரா முருகனே ஆறுமூக அழகனே....
அரோகரா முருகனே ஓம் சிவசக்தி குமரனே....
எடுத்து வந்தோம் ஆடி ஆடி மயிலிறகு காவடியை
நினைத்து வந்தோம் ஓடி ஓடி இளமுருகு திருவடியை....
படித்து வந்தோம் கவசம் பாடி தினமுருக புகழடியை
பணிய வந்தோம் நாடி நாடி உளமுருக மலரடியை....
வா வா முருகா பால்குட பாலகா
வா வா முருகா பன்னிர் குட வேலவா....
வா வா முருகா மலைக்கோயில் முன்னவா
வா வா முருகா மனக்கோயில் மன்னவா....
அரோகரா முருகனே அக்னிபூ தேவனே....
அரோகரா முருகனே ஓம் சரவணபவனே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக