அழகாய் பழகும் நாவில் நற்றமிழ்
அமுதாய் திகழும் பாவில் பைந்தமிழ்....
தேனில் ஊறும் சுவையாய் தீந்தமிழ்
மலரில் வீசும் மணமாய் பூந்தமிழ்....
மாய விண்ணில் ஒளி கண்டு
தாய் மண்ணில் ஒலி கொண்டு
வாழ்வில் வழி தேடியது மானுடம்....
ஆண்டவன் அருளை கொண்டு
அகத்தியர் அகரம் கண்டு
வாழ்வியல் மொழி கண்டது தமிழிடம்....
தெய்வீக வரம் பெற்றெழுந்து
தொல்காப்பியர் இலக்கணம் கற்றெழுதி
முத்தமிழ் பெற்றது முழுவடிவம்....
கன்னித்தமிழ் எய்தினாள் முழுப்பருவம்....
மா வேந்தர்கள் கற்குவியல்
எடுத்து எழுப்பியது
திருக்கோயில்கள்.....
பா வேந்தர்கள் சொற்குவியல்
எடுத்து எழுதியது
சொற்க்கோயில்கள்.....
எந்நாளும் புலவர் பெருங் கூட்டம்
ஓடியது தேடியது தமிழ் காட்டை....
மண்ணாளும் மன்னர் தர பட்டம்
பாடியது ஆடியது பாட்டு வேட்டை....
கவிகள் பலராம் நாட்கள் பலவாம்
நீந்தியது உலாவியது செந்தமிழ் கடலில்....
செவிகள் எல்லாம் ஏட்டுகள் எல்லாம்
நிரம்பியது வழிந்தது கன்னித்தமிழ் பாடலில்....
இறைவனும் கேட்டுத்தான்
ஆடினான் பார் சொக்கி....
இசைக்கும் தமிழுக்கும்
மயங்காதோர் யார் பாக்கி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக