கிருஷ்ண வர்ணம் 2
புல்வெளிகள் செழித்தாடும்,
பல்லுயிர்கள் பறந்தாடும்,
யமுனை நதியோடும்,
அந்நதியோரம் ஆனந்தவனம்....
ஆனது பிருந்தாவனம்.....
மானோடும், மயிலோடும்,
அணில், முயல்கள் துள்ளியோடும்,
அழகியல் வழிந்தோடும்,
பூத்து குலுங்கும் பூங்காவனம்....
யாதவ குல
மாதவன் ஆடும்....
விழியாடும் மாதவியுடன்
களியாடும் -
விளையாடும் பிருந்தாவனம்....
அங்கு எவர் வரினும்
இருந்தனர்
மகிழ்ந்த வண்ணம்....
ஆதலால் பிருந்தாவனம்
இருந்தது நிறைந்தது
என்றென்றும்
வருந்தா வண்ணம்....
கண்ணன், பலராமன்
கூட்டணியே குதூகலம்....
சிறியோர் பெரியோர்
கூட்டத்திற்கே
பிருந்தாவனம் ஆனது
விளையாட்டு மைதானம்....
அவதார நோக்கம் - என்று
அறியாமல் அதிசயம் நிகழும்....
அங்கே நாளும்
ஒரு அற்புத தினம்....
கோபாலன் குழலிசையில்
கோபியர், ராதை
குரலிசையில், குழலசைவில்....
வண்டுகள்
நாவில் தேன்சூடும் -
அதற்கு நாளும்
தாவரங்கள் பூச்சூடும்....
குயில்கள்
குருவிகள் பாச்சூடும் -
அதற்கு நல்ல
பொழுதுகள் ஒளிசூடும்....
அனு தினம் புது மணம்,
பால் மணம் கமழும் -
பசு வனம்.... பிருந்தாவனம்....
அது பிரபாவதி ராதை மனம்.....
அனந்தம் பொங்கும் அதிர்ஷ்டவனம்....
அற்புதம் நிகழும் அதிசயவனம்....
பிருந்தாவனம் பூமியில் ஆனது சொர்க்கவனம்....
காரணம் அதற்கு -
பகவான் பூசிய கிருஷ்ண வர்ணம்....
சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக