ஞாயிறு, 6 அக்டோபர், 2024

காட்டு பூக்கள் 17


காட்டு பூக்கள்

அனைவர்
கண்ணுக்கும் தெரியுது.....
மரம், செடிகள் முளைக்குது.....
வானுயர..... விண்ணுயர.....
எவர் 
கண்ணுக்கும் தெரியாது.....
எத்தனையோ வேர்கள்
அதற்கு உழைக்குது.....
அயராமல்..... தானுயராமல்.....

மரம், செடிகளாய் 
ஒரு சிலர் 
வளர்ந்தாலும், உயர்ந்தாலும்.....
வேர்களாய் பலர்  - 
வெளியில் கூட.....
தெரிவது இல்லை.....

காலம்
வரையாத வரலாறு.....
வேர்கள்
வற்றாத பேராறு.....

வேறுதலாய் 
அல்லாமல் மாறுதலாய்.....
வேருக்கும்,
வேர்களாய் ஆனவர்கட்கும் 

ஆற்றாத ஆற்றுதலாய்.....
போற்றாத போற்றுதலாய்.....

இக்கவி இயற்றுதலாய்
ஆகட்டும் சிறு ஆறுதலாய்......

கா.சக்திவேல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக