சீதாராம துளிகள் 2
அழகில் ஜானகி
இதழில் பூ வழி.....
மிதிலை மான் விழி.......
அவளை ஏமாற்றியதோ
ஜாடையில்
மாய மான் மொழி.......
அசோக வனம்
அது ஆகியிருந்தது
ஒரு சோக வனம்........
அன்னை மைதிலி.......
மனம் அடைந்தது
அளவில்லா வலி.......
அன்றாடம் கலங்கியது
அவள் மைவிழி.......
என்றும் இனிய
மங்கா மனையாழி.......
எனினும் இன்றோ
மணாளனை எண்ணி
ஏங்கும் மனநோயாளி போல.......
நல்ல வேளை
வழி காட்டியது
கணையாழி.......
அல்லல் களைய
அதை காட்டியது
அனுமன் பலசாலி.......
ஆனந்த கண்ணரீல்
சீதாவதி......
ஆயிரமாயிரம் நன்றிகள்
அவ்வன்னையின் அன்பில்
அங்கு பெருகியது
ஒரு மகா நதி.......
அதை பருகியது
ஒரு மாருதி.......
பஜ்ரங்கி
பணிவுடன் அறிய
ராமனிடம் போய் உரைய.....
பூமிஜா
சொன்ன ஓர் மொழி.....
வந்து
தன்னை மீட்டி
செல்ல போர் வழி.....
வைதேகி
தேகம் மெலிந்த
சுடர்ஒளி......
அஞ்சனை மைந்தனிடம்
நெஞ்சனைத்த நாயகனுக்கு
அளித்தாள்
சூடாமணி......
சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக